ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உத்தரப்பிரதேசத்தில் ஜெய்ஸ்ரீராம் கூறச் சொல்லி டாக்ஸி ஓட்டுநர் கொலை

உத்தரப்பிரதேசத்தில் ஜெய்ஸ்ரீராம் கூறச் சொல்லி டாக்ஸி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  

News image

கொலை செய்யப்பட்ட டாக்ஸி ஓட்டுநர் அப்தாப் ஆலம்

Updated On :9 செப்டம்பர் 2020, 11:11 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் ஜெய்ஸ்ரீராம் கூறச் சொல்லி டாக்ஸி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் அப்தாப் ஆலம். இவர் தனியார் நிறுவன டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தில்லியிலிருந்து நொய்டா சென்ற அப்தாப் பயணியை இறக்கிவிட்டு திரும்பி வரும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அப்தாபின் மகன் முகமது சபீர் நொய்டாவில் கெளதம் புத்தாநகரில் உள்ள பதல்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் தனது தந்தை இறப்பதற்கு முன் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது மதுபோதையில் இருந்த சிலர் தனது தந்தையை ஜெய்ஸ்ரீராம் கூறக் கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையுடன் பேசிய தொலைபேசி அழைப்பை காவல்துறையினரிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த சபீர் இதுகுறித்த உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வகுப்புவாத நோக்கத்துடன் கொலைச் சம்பவம் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள நொய்டா காவல்துறையினர் குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.