ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மீட்கப்பட்ட முதலையை விடுவிக்க வனத்துறையிடம் ரூ.50000 கேட்ட கிராம மக்கள்

உத்தரப்பிரதேசத்தில் கிராமத்தில் புகுந்த முதலையை மீட்ட பொதுமக்கள் அதனை வனத்துறையிடம் ஒப்படைக்க ரூ.50 ஆயிரம் கோரிய விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

News image

மீட்கப்பட்ட முதலையை விடுவிக்க வனத்துறையிடம் ரூ.50000 கேட்ட கிராம மக்கள்

Updated On :11 செப்டம்பர் 2020, 3:55 pm

DIN

உத்தரப்பிரதேசத்தில் கிராமத்தில் புகுந்த முதலையை மீட்ட பொதுமக்கள் அதனை வனத்துறையிடம் ஒப்படைக்க ரூ.50 ஆயிரம் கோரிய விசித்திரமான சம்பவம் நடந்தேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயப் பகுதியில் பெய்த கனமழையால் அருகில் உள்ள மிடானியா கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் எதிர்பாராத விதமாக முதலை ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது.

இதனையொட்டி வனத்துறைக்குத் தகவல் தெரிவித்த மிடானியா கிராம மக்கள் தாங்களாகவே முதலையை மீட்டனர். இதனையறிந்து வனப் பாதுகாவலர் அனில் ஷா தலைமையிலான வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் முதலையை பாதுகாப்பான பகுதியில் விட முடிவு செய்து கிராம மக்களிடையே முதலையைக் கேட்டுள்ளனர்.

அப்போது முதலையை பாதுகாப்பாக மீட்டதால் தங்களுக்கு ரூ.50 ஆயிரத்தை வனத்துறையினர் வழங்கவேண்டும் எனவும் அதுவரை முதலையை விடுவிக்கப்போவதில்லை எனவும் கிராம மக்கள் கூறியதைக் கேட்டு வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து முதலையை கிராம மக்கள் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.