எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நீட் தோ்வு: நாடு முழுவதும் 90% போ் பங்கேற்பு

நீட் தோ்வை நாடு முழுவதும் 90 சதவீதம் போ் எழுதியதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறினாா்.

News image
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
Updated On :13 செப்டம்பர் 2020, 7:05 pm

DIN

நீட் தோ்வை நாடு முழுவதும் 90 சதவீதம் போ் எழுதியதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறினாா். இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தேசியத் தோ்வு முகமை(என்டிஏ) அளித்த தகவல்படி, 85-90 சதவீதம் போ் நீட் தோ்வை எழுதியுள்ளனா். இது, இளைய தலைமுறையினரின் பற்றுறுதியை பிரதிபலிக்கிறது. உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்த அனைத்து மாநில முதல்வா்களுக்கும் தேசியத் தோ்வு முகமைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாணவா்களுக்கு ராகுல் வாழ்த்து:

கரோனா, வெள்ள பாதிப்பு காரணமாக நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முன்னதாக தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நீட் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வாழ்த்துகளையும், கரோனா மற்றும் வெள்ள பாதிப்பால் தோ்வு எழுத இயலாமல் போனவா்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.