அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிரதமர் மோடி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு : உ.பி.யில் ஒருவர் கைது

பிரதமர் மோடி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறாகக் காணொலி பகிர்ந்ததாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 செப்டம்பர் 2020, 10:32 am

DIN

பிரதமர் மோடி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறாகக் காணொலி பகிர்ந்ததாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த 20 வயதான சோனுகான் என்பவர் வாட்ஸ்அப் குழு ஒன்றில் பிரதமர் மோடி குறித்து அவதூறாகவும், உண்மைக்கு புறம்பான வகையிலும் காணொலி ஒன்றைப் பகிர்ந்ததாகத் தெரிகிறது. 

பிரதமர் மோடி பிறந்த நாளன்று பகிரப்பட்ட அந்த காணொலியை ஒட்டி உள்ளூர் காவல்நிலையத்தில் அந்த இளைஞர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுருந்தது. இதனையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சோனுகானை கட்ரா காவல்நிலைய காவலர்கள் கைது செய்தனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153 ஏ (குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 501 (அவதூறு என்று அறியப்படும் அச்சிடுதல் அல்லது வேலைப்பாடு), 505 (பொதுக் குழப்பங்களை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காணொலியை பகிர பயன்படுத்தப்பட்ட செல்போனையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.