ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோழிக்கோடு விமான விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் உள்பட பலருக்கு கரோனா

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேரிட்ட விமான விபத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்ட நிர்வாக அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோழிக்கோடு விமான விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் உள்பட பலருக்கு கரோனா
Updated On :14 ஆகஸ்ட் 2020, 11:11 am

ENS


மலப்புரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேரிட்ட விமான விபத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்ட நிர்வாக அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தலைவர் உள்ளிட்டோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதில், மீட்புப் பணிகளை தலைமையேற்று நடத்தியவர் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கே. கோபாலகிருஷ்ணன். அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தனக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும், நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இவருடன் இணைந்து பணியாற்றிய துணை ஆட்சியர், உதவி ஆட்சியர், பாதுகாவலர்கள் என 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

கேரளத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இடையே இந்த விமான விபத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மாநில சுகாதாரத் துறையினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, விமான விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் இருவருக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டது. 

மேலும், மலப்புரம் மாவட்ட காவல்துறை மூத்த அதிகாரி அப்துல் கரீமுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.