எச்சரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தியது: பொருளாதார சரிவு குறித்து ராகுல் விமரிசனம்

​இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பதிவில் ராகுல் தெரிவித்திருப்பதாவது:

"ஜிடிபி 24 சதவகிதிம் சரிந்துள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் இது மிகவும் மோசமானது. துரதிருஷ்டவசமாக எச்சரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தியது."

முன்னதாக மத்தியப் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்மறையாக போக்கில் -23.9 சதவிகிதத்துக்கு சரிந்திருப்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com