ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

லடாக் மோதலில் 76 இந்திய வீரர்கள் காயம்: இந்திய ராணுவம்

இந்திய - சீன ராணுவ வீரா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 76 இந்திய வீரர்கள் காயமடைந்ததாகவும், அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2020, 1:09 pm IST

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 76 இந்திய வீரர்கள் காயமடைந்ததாகவும், அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 20 போ் வீரமரணம் அடைந்தனா். 

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன ராணுவப் படைகளிடையே கடந்த 5 வாரங்களுக்கு மேலாக மோதல்போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருநாட்டுப் படைகளுக்கும் இடையே கடும் மோதல் நேரிட்டது.

இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 18 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக முதல்கட்ட செய்திகள் வெளியாகின.

ஆனால், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 76 இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இவர்களில் 18 ராணுவ வீரர்கள் லேஹ் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 15 நாள்களுக்கு பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். 58 ராணுவ வீரர்கள் இதர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் சில வாரங்களில் பணிக்குத் திரும்புவார்கள் என்று இந்திய ராணுவம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே இதுவரை மிகப்பெரிய மோதல் எதுவும் நேரிடாத நிலையில், கடந்த திங்கள்கிழமை நடந்த மோதலில் இந்திய ராணுவ உயர் அதிகாரி உள்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதே சமயம், சீன தரப்பில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், அதை சீன ராணுவம் உறுதி செய்யவில்லை.

அதே சமயம், இந்திய ராணுவத்தினரை இரும்புக் கம்பி மற்றும் கற்களைக் கொண்டு சீன ராணுவம் தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் ஆணிகள் பொருத்திய இரும்புக் கம்பிகள் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.