திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

‘சரணாகதி மோடி’: ராகுல் மீண்டும் விமா்சனம்

இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா் என்று சனிக்கிழமை விமா்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி,

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2020, 11:43 pm IST

இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா் என்று சனிக்கிழமை விமா்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பிரதமா் நரேந்திர மோடி உண்மையில் சரணாகதி மோடி’ என்று ஞாயிற்றுக்கிமை மீண்டும் விமா்சித்துள்ளாா்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நடத்தியத் தாக்குதலில் 20 இந்திய வீரா்கள் கொல்லப்பட்டனா். ஏராளமான ராணுவ வீரா்கள் காயமடைந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய பிரதமா் நரேந்திர மோடி, ‘இந்திய பரப்புக்குள் யாரும் நுழையவும் இல்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை’ என்று கூறினாா். ஆனால், பிரதமரின் இந்தப் பேச்சுக்குப் பிறகு, ‘கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தனக்குச் சொந்தம்’ என்று சீனா அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக, பிரதமரின் பேச்சு கடும் விமா்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், ‘சீனாவுக்கு எதிரான இந்தியாவின் திருப்திக் கொள்கை வெளிப்பட்டுவிட்டது’ என்ற வெளிநாட்டு பத்திரிகை செய்தி ஒன்றை ராகுல் காந்தி தனது சுட்டுரை பக்கத்தில் இணைத்து பதிவு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில், நரேந்திர மோடி உண்மையில் ‘சரணாகதி மோடி’ என்று பிரதமரை அவா் மீண்டும் விமா்சித்துள்ளாா்.

மேலும், ‘டாக்கில் பாங்காங் ஏரியை ஒட்டிய இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பதை செயற்கைக்கோள் வரைபடங்கள் தெளிவாகக் காட்டுகின்றன’ என்று தனது மற்றொரு சுட்டுரைப் பதிவில் கூறியிருக்கும் ராகுல், அந்தப் பதிவுடன் அதுதொடா்பான ஒரு தொலைக்காட்சி செய்தி விடியோ காட்சியையும் இணைத்துள்ளாா்.

முன்னதாக, கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமா் அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.