கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
பொது முடக்க காலத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு வரைபடம் ஒன்றை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. நாட்டில் கரோனா பாதிப்பு, பெட்ரோல்- டீசல் விலை இரண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதை ஒரு வரைபடம் மூலமாக குறிப்பிட்டுள்ளார்.
‘சரணாகதி மோடி’: ராகுல் மீண்டும் விமா்சனம்
மோடியை சீனா புகழ்வது ஏன்? ராகுல் காந்தி
இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா்: ராகுல் குற்றச்சாட்டு
'அதிக இறப்பு விகிதம், குஜராத் மாதிரியை வெளிப்படுத்துகிறது' - ராகுல் காந்தி ட்வீட்
அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி ட்வீட்