கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி

கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. 

பொது முடக்க காலத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு வரைபடம் ஒன்றை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. நாட்டில் கரோனா பாதிப்பு, பெட்ரோல்- டீசல் விலை இரண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதை ஒரு வரைபடம் மூலமாக குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com