புது தில்லி: இந்தியாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
நாக்பூரில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து நாக்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 81 பேருக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை மட்டும் 13 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று வரை நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2020-ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. தொடக்கத்தில் சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒட்டுமொத்தமாக கேரளத்தில் 17 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 11 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 10 பேருக்கும், தில்லியில் 6 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றால் கா்நாடகத்தில் 5 பேரும், லடாக்கில் 3 பேரும், ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீா், பஞ்சாபில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களில் 17 வெளிநாட்டினரும், இத்தாலியைச் சோ்ந்த 16 சுற்றுலாப் பயணிகளும் அடங்குவா்.