இந்த நெடுந்தூர சவாலான பயணம் குறித்து 15 வயதே ஆன ஜோதி கூறுகையில், 'தில்லியில் என் தந்தை ரிக்ஷா ஓட்டும் வேலை செய்கிறார். தற்போது ஊரடங்கு காரணமாக ரிக்ஷா உரிமையாளரிடம் அதனை ஒப்படைக்க வேண்டியதாயிற்று. மேலும், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணமில்லை. அங்கு யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. அப்போதுதான் ஊருக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து ஒரு லாரி டிரைவரிடம் பேசினோம். அவர், தர்பங்காவுக்கு அழைத்துச் செல்ல ரூ.6,000 கேட்டார். ஆனால், அவ்வளவு பணம் இல்லாததால் நாங்கள் ரூ. 500-க்கு ஒரு சைக்கிள் வாங்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.