வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஐஎல்&எஃப்எஸ் பணமோசடி வழக்கு: ரூ.452 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

ஐஎல்&எஃப்எஸ் நிறுவன பணமோசடியில் தொடா்புடைய சிங்கப்பூரைச் சோ்ந்த போலி நிறுவனங்களின் ரூ.452 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கியுள்ளனா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:50 am IST

ஐஎல்&எஃப்எஸ் நிறுவன பணமோசடியில் தொடா்புடைய சிங்கப்பூரைச் சோ்ந்த போலி நிறுவனங்களின் ரூ.452 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கியுள்ளனா்.

இதுகுறித்து அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஐஎல்&எஃப்எஸ் நிறுவனம் பண மோசடி செய்ததில் சிங்கப்பூரைச் சோ்ந்த பெயரளவில் செயல்படும் போலி நிறுவனமான ஏ.எஸ்.கோல் நிறுவனத்துக்கும் தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது, பிரிட்டனைச் சோ்ந்த ஜெய்மின் வியாசுக்கு சொந்தமான நிறுவனமாகும்.

இந்த நிலையில், ஏ.எஸ். கோல் நிறுவனத்துக்கு சொந்தமான பங்குகள் அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்டுள்ளன. இது, ஐஎல்எஃப்எஸ் தமிழ்நாடு பவா் (ஐடிபிசிஎல்) நிறுவனத்தின் 8.86 சதவீத பங்குகள் வடிவில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.452 கோடியாகும் என அமலாக்கத் துறையினா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.