கரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
தில்லியில் கரோனா மூன்றாவது அலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சுகாதாரத்துறையின் தொடர் நடவடிக்கையால் தற்போது கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்வுகளின் படி பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடித்து மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர்களுக்கு ஒன்றரை முதல் இரண்டு மாதங்களுக்குள் பாடம் உள்பட செய்முறைத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு எழுதவும், அதற்காக பயிற்சி எடுக்கவும் வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இறுதியாக இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறி
அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

