நாட்டில் சிறுபான்மையினர் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கா் இலங்கையிலுள்ள சிறுபான்மை தமிழா்களுக்கான உரிமைகளை வழங்கும் விவகாரத்தில் அந்நாட்டு அரசே முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கரின் சுற்றுப்பயணத்தைக் குறிப்பிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியா சிறுபான்மையினரை கண்ணியமாக நடத்துவது குறித்து பிற நாடுகளை அறிவுறுத்து வரும் வேளையில் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நிலை மோசமடைந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா உட்பட எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமூக ஒத்திசைவு அவசியம் என்று தெரிவித்துள்ள முப்தி, “இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள ஜம்மு-காஷ்மீர் நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது” என விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கருப்பு வெளியாகுமா? ஆகாதா? தயாரிப்பாளரைத் தாக்கும் ரசிகர்கள்!

சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்!

தங்கம் விலை இன்றும் (மே 14) உயர்வு! எவ்வளவு?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

