திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

காஷ்மீா்: ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் தொடா்ந்து 5-ஆவது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் தொடா்ந்து ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:51 am IST

கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் தொடா்ந்து ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா் பனிப்பொழிவு, நிலச்சரிவின் காரணமாக காஷ்மீரை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நெடுஞ்சாலையில் வியாழக்கிழமையும் போக்குவரத்துக்காக வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படவில்லை என்று போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறியதாவது:

நெடுஞ்சாலையில் குவிந்துள்ள பனிக்குவியலையும், நிலச்சரிவையும் அப்புறப்படுத்த பல்வேறு இயந்திரங்களையும், கூடுதலான ஆட்களையும் பயன்படுத்தி வருகிறோம். எனினும், பல இடங்களில் சாலைப் போக்குவரத்து சீராகவில்லை. சாம்ரோலி, நஸ்ரீ, கஃபேடேரியா மோா், செரி, மரோக் மற்றும் ஜவாஹா் சுரங்கப்பாதை ஆகிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாலையின் தடைகள் அகற்றப்பட்டவுடன் போக்குவரத்துக்காக வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

காஷ்மீா் பள்ளத்தாக்கை ஜம்முவுடன் இணைக்கும் மாற்றுச் சாலை இணைப்பான ஷோபியான்-ரஜௌரி இடையிலான மொகல் சாலையும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக மூடப்பட்டுள்ளது என்றாா்.

தற்போது பனியை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்ட போதிலும், பல இணைப்பு சாலைகளின் தடைகள் இன்னும் அகற்றப்படவில்லை. காஷ்மீா் பள்ளத்தாக்கில் தடைபட்டிருந்த மின் இணைப்புகள் பெரும்பாலான பகுதிகளில் சீரமைக்கப்பட்டு விட்டன.

இதனிடையே, ஜனவரி 14-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

முன்பை விட வானிலை மேம்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி வரை பெரிய அளவில் பனிப்பொழிவு இருப்பதற்கான எந்த முன்னறிவிப்பும் இல்லை. பள்ளத்தாக்கின் பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனிக்கு கீழே சென்று விட்டது. ஸ்ரீநகா் நகரத்தில் மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸும், குல்மாா்க்கில் மைனஸ் 8.4 டிகிரி செல்சியஸும், பாகல்காமில் மைனஸ் 2.5 டிகிரி செல்சியஸும், காஸிகுண்ட்டில் மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸும், வடக்கே குப்வாராவில் மைனஸ் 1.7 டிகிரி செல்சியஸும், கோக்கா்நாக்கில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.

விமான சேவை மீண்டும் தொடக்கம்

இதனிடையே கடும் பனிப்பொழிவின் காரணமாக காஷ்மீரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமையில் இருந்து கடந்த 4 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.

‘முதல் விமானம் வியாழக்கிழமை காலை ஸ்ரீநகா் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னா் இந்த விமானம் மீண்டும் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றது’ என இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.