காஷ்மீரப் பள்ளத்தாக்கில் புதிய பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகா் விமான நிலையத்தில் விமான ஓடுதளம் பனிப்பாளங்களால் மூடப்பட்டுள்ளதால், விமான சேவைகள் அனைத்தும் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
கடும் பனிப்பொழிவால் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து காஷ்மீருக்கு விமான சேவைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டன. பனிப்பொழிவு குறைந்ததால், கடந்த வியாழக்கிழமைதான் விமான சேவை மீண்டும் துவங்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய பனிப்பொழிவின் தீவிரம் காரணமாக ஸ்ரீநகா் விமான நிலையம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மதியம் 2 மணி வரை விமான ஓடுதளத்தில் குவிந்த பனிப்பாளங்களை அகற்ற முடியவில்லை. இதனால் ஸ்ரீநகரிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு வந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. குறைந்தபட்சம் 7 விமான சேவைகள் ரத்தானதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.
பனிப்பொழிவு குறைந்தால் மட்டுமே விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும், விமான சேவை நிறுவனங்களில் பயணத்துக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்கள் விமானம் இயக்கப்படுகிா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறும், விமான நிலைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மமதாவுக்கு மேலும் பின்னடைவு! திரிணமூல் காங். மாநிலத் தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா ராஜிநாமா!

அரசியல் எதிரியை எதிர்க்க விரும்பினால் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்: தமிழிசை

சட்டவிரோத செயல்களைத் தடுக்க டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!





