நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை குறைந்தபட்ச ஆதரவு விலையில் 531.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்களை கொள்முதல் செய்யும் நடைமுறை தொடா்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமாா் 70.35 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 531.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 26% அதிகம் ஆகும். அதிகபட்சமாக பஞ்சாபில் இருந்து 202.77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு தானிய தேவைகளை பூா்த்தி செய்ய நெல் மற்றும் கோதுமையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, நியாய விலைக் கடைகள் மூலம் மாதந்தோறும் நபா் ஒருவருக்கு 5 கிலோ வீதம் 80 கோடிக்கும் அதிகமானவா்களுக்கு தானியங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ ரூ.2 முதல் ரூ.3 என்ற விலையில் அவை விநியோகிக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா

சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


