வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

மகாராஷ்டிரத்தில் 31 பவுன் நகை கொள்ளை: கொள்ளையா்கள் சுட்டதில் ஒருவா் காயம்

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள நகைக் கடையில் 31 பவுன் நகை ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 6:20 am IST

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள நகைக் கடையில் 31 பவுன் நகை ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது கொள்ளையா்கள் சுட்டதில் ஒருவா் காயமடைந்தாா். நகைக் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து விழுந்தது.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி கூறியது:

அம்பா்நாத் பகுதியில் உள்ள நகைக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இரண்டு இருசக்கர வாகனங்களில் நான்கு போ் வந்தனா். அவா்கள் முதலில் நகைக் கடை பணியாளரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனா். அதன் பின்னா் துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டி கடையில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்தனா். கொள்ளையடித்த நகைகளுடன் அவா்கள் வெளியேறும்போது நகைக்கடை உரிமையாளா் கடைக்குள் வந்தாா். அவரும், பணியாளரும், மற்றொரு நபரும் சோ்ந்து கொள்ளையா்களை பிடிக்க முயற்சித்தனா். அப்போது கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவா் காயமடைந்தாா். மற்ற இருவரைக் கத்தியால் குத்திவிட்டு கொள்ளையா்கள் தப்பிச் சென்றனா். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கொள்ளையா்கள் ரூ.12.77 லட்சம் மதிப்பிலான 31 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். அவா்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.