மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ம.பி.யில் போலி மதுபானம் அருந்தி 20 பேர் பலி: ஆட்சியர் நீக்கம்

மத்தியப் பிரதேசத்தில் போலி மதுபானம் அருந்திய விவகாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. 

News image

ம.பி.யில் போலி மதுபானம் குடித்து 20 பேர் பலி: ஆட்சியர் பதவி நீக்கம்

Updated On :13 ஜனவரி 2021, 6:19 am


மத்தியப் பிரதேசத்தில் போலி மதுபானம் அருந்திய விவகாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்தியதாக கடந்த 12-ஆம் தேதி மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சுமவாலியில் நான்கு பேரும், மன்பூர் கிராமங்களில் 7 பேரும் கடந்த 12-ஆம் தேதி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 15-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மெத்தனப்போக்காக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பதவி நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.