பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கேரளத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறப்பு

கேரளத்தில் கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை திரையரங்குகள் திறக்கப்பட்டன. 

News image

Kerala cinema halls open after 10 months of Covid shutdown

Updated On :13 ஜனவரி 2021, 1:03 pm IST

கேரளத்தில் கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை திரையரங்குகள் திறக்கப்பட்டன. 

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. பொது முடக்கத் தளர்வுகளில், திரைத்துறையினரின் தொடர் கோரிக்கைகளைத் தொடா்ந்து, 50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்கம் திறப்பு எனப் படிப்படியான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, கேரள மாநிலத்தில் கடந்த பத்து மாதங்களுக்குப் பிறகு கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. 

மேலும், மாநிலத்தில் உள்ள மொத்தம் 670 திரையரங்குகளில் 500-க்கும் மேற்பட்ட அரங்குகள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டன. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜயின் திரைப்படமான மாஸ்டர் முதல் படமாக வெளியிடப்பட்டது. இருப்பினும் சில திரையரங்கங்களில், ப்ரொஜெக்டர் உபகரணங்கள் பழுது காரணமாகப் படம் நிறுத்தப்பட்டது. 

பாலக்காடு மாவட்டத்தில், விஜயின் ரசிகர்கள் பெரிய கட்அவுட்களுக்கு மலர்களால் அர்ச்சித்தும், பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.