சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி

லடாக் யூனியன் பிரதேசத்தில் ராணுவ வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image

லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி

Updated On :16 ஜனவரி 2021, 3:15 pm IST

லடாக் யூனியன் பிரதேசத்தில் ராணுவ வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கும், காவல்துறையினர், ராணுவ வீரர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது,

இது தொடர்பாக பேசிய தடுப்பூசி போட்டுக்கொண்ட வீரர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உடலில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், பக்கவிளைவுகளுக்கான அறிகுறிகளும் இல்லை என்றும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.