அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

கரோனா தடுப்பூசி தொடர்பான புரளிகளை நம்பாதீர்கள்: கேஜரிவால்

கரோனா தடுப்பூசி தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

News image

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)

Updated On :16 ஜனவரி 2021, 4:15 pm IST

கரோனா தடுப்பூசி தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா தடுப்பூசி முழு பாதிகாப்பானது என்று வல்லுநர்கள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.

கரோனா தடுப்பு மருந்து குறித்து பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ''உலகில் மிகப்பெரிய கரோனா தடுப்பு மருந்து நிகழ்வு நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால் கரோனா தடுப்பு மருந்து குறித்த வந்தந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் 81 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவரளுடன் உரையாடினேன். அதில் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. கரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் வெற்றியடைவார்கள்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.