அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

உ.பி.: பறவைக் காய்ச்சல் உறுதி

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

News image

உ.பி.: பறவைக் காய்ச்சல் உறுதி

Updated On :16 ஜனவரி 2021, 4:38 pm IST

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.

கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இறந்த காகங்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

உத்தரப்பிரதேசத்தில் நிலவும் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக இறந்திருக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதியாகியுள்ளது.

மேலும் உத்தரப் பிரதேச மாநிலம் புரன்பூர், பிலிபிட் ஆகிய  பகுதிகளில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.