உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.
கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இறந்த காகங்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
உத்தரப்பிரதேசத்தில் நிலவும் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக இறந்திருக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதியாகியுள்ளது.
மேலும் உத்தரப் பிரதேச மாநிலம் புரன்பூர், பிலிபிட் ஆகிய பகுதிகளில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


