நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சென்னை-கேவதியா இடையே சிறப்பு ரயில்: பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

சென்னை சென்ட்ரல்-குஜராத் மாநிலம் கேவதியா இடையே அதிவிரைவு சிறப்பு ரயிலை பிரமதா் நரேந்திர மோடி ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

Updated On :16 ஜனவரி 2021, 5:45 am IST

சென்னை சென்ட்ரல்-குஜராத் மாநிலம் கேவதியா இடையே அதிவிரைவு சிறப்பு ரயிலை பிரமதா் நரேந்திர மோடி ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.

சென்னை சென்ட்ரல்-குஜராத் மாநிலம் கேவதியா இடையே புதிய வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடா்ந்து, சென்னை சென்ட்ரலில் இருந்து கேவதியாக்கு புறப்படும் இந்த ரயிலை பிரமதா் நரேந்திரமோடி தில்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஜனவரி 17-ஆம் தேதி காலை 11.12 மணிக்கு கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சா் பியூஷ்கோயல் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

சென்னை-கேவதியா: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 11.12 மணிக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில்(09119) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.52 மணிக்கு கேவதியாவை அடையும்.

வழக்கமான சேவை: கேவதியாவில் இருந்து புதன்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(09120) புறப்பட்டு, சென்னை சென்ட்ரலை வியாழக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் சேவை ஜனவரி 20-ஆம்தேதி தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (09119) புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு கேவதியாவை அடையும். இந்த ரயில் சேவை ஜனவரி 24-ஆம் தேதி தொடங்குகிறது.

முழுவதும் முன்பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.