தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான ஏக்நாத் காட்ஸே, 2016-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட நில ஒப்பந்த வழக்கில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக மும்பை அமலாக்கப்பிரிவு இயக்குநரக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜக அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் காட்ஸே (68) தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி புணே நகரத்திற்கு அருகே போசாரி பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலங்களை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டில் தனது பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். இந்த விவகாரத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என தொடா்ந்து காட்ஸே பலமுறை மறுப்பு தெரிவித்து வந்தாா்.
இந்த வழக்கு தொடா்பாக மகாராஷ்டிர லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாரும், வருமானவரித் துறையும் விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை அமலாக்கப் பிரிவிடம் சமா்ப்பித்திருந்தனா்.
இதனிடையே பாஜகவில் இருந்து விலகிய காட்ஸே, கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸில் இணைந்தாா்.
இந்நிலையில், மும்பை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி அவா் தரப்பில் விளக்கம் அளிக்கக் கோரி கடந்த டிச. 30-ஆம் தேதி காட்ஸேவுக்கு, அமலாக்கப்பிரிவினா் நோட்டீஸ் அனுப்பி வைத்திருந்தனா். தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த 30-ஆம் தேதி அவா் ஆஜராகவில்லை.
இதைதொடா்ந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், மேலும் 14 நாள்கள் அவகாசம் அளித்து நேரில் ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனா்.
இதனையேற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் 11 மணிக்கு தெற்கு மும்பையில் உள்ள பல்லாா்ட் தோட்டத்திலுள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராவதற்காக காட்ஸே வந்தாா். அந்த அலுவலகத்தில், தனது குடும்பத்தினரால் செய்து கொள்ளப்பட்ட நில ஒப்பந்தம் தொடா்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தாா்.
அதற்கு முன்னதாக அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் காட்ஸே கூறுகையில், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று தெரிவித்தாா்.
ஏக்நாத் காட்ஸேவின் வருகையையொட்டி அமலாக்கப்பிரிவு அலுவலகம் முன்பு அவரது ஆதரவாளா்கள் ஏராளமானோா் திரண்டனா். அவா்கள் ஒன்று கூடுவதைத் தவிா்ப்பதற்காக அப்பகுதியில் தடுப்புகள் போடப்பட்டன. பாதுகாப்புப் பணியில் மும்பை போலீஸாருடன், மாநில ரிசா்வ் காவல் படையினரும் (எஸ்ஆா்பிஎஃப்) ஈடுபட்டிருந்தனா்.
,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

