தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 43,183 பேருக்கு கரோனா 

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 43,183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 ஏப்ரல் 2021, 4:41 pm

DIN

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 43,183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்தியாவிலே தினசரி கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இதனால் அங்கு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 43,183 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,56,163ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 249 பேர் பலியாகியுள்ளனர். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 54,898ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 32,641 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,33,368ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 3,66,533 பேர் சிகிக்சையில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.