எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

6-9 ம் வகுப்புகளுக்கு விடுமுறை: கர்நாடகத்தில் கரோனா கட்டுப்பாடுகள்

கர்நாடகத்தில் கரோனா தொற்று பரவலைக் குறைக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2021, 4:01 pm

DIN

கர்நாடகத்தில் கரோனா தொற்று பரவலைக் குறைக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

கர்நாடகத்தில் இன்று (ஏப்.2) ஒரு நாளில் மட்டும் 4,991 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

அதில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரணி, போராட்டம் போன்றவற்றை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் அதிக அளவு மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.