டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உ.பி.,யில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 11:58 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
உத்தரப் பிரதேச மாநிலம், நாராயண்பூரைச் சேரந்தவர் பாஜக தலைவர் பிரிஜேஷ் சிங்(52). இவர் உ.பி., மாநிலத்தில் விரைவில் நடக்கவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறார். நாராயண்பூர் பகுதியில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 
அப்போது மொக்லஹா எனும் இடத்தில் இவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் குண்டு துளைத்ததில் பிரிஜேஷ் சிங் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதுகுறித்து பிரிஜேஷ் சிங் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அத்துடன் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும் அவர்கள் ஆர்ப்பட்டாத்தில் ஈடுபட்டனர்.
புகாரைத்தொடர்ந்து இவ்வழக்கில் 3 பேரை கைது செய்த காவல்துறையினர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.