47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இ-பாஸ் கட்டாயம்: தில்லி பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள்

தில்லியில் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் போக்குவரத்திற்கும், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்கும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2021, 8:33 am

DIN

தில்லியில் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் போக்குவரத்திற்கும், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்கும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தில்லி அரசு வெளியிட்டுள்ளது,

அதில் இரவுநேர பணிகளுக்கு செல்பவர்களுக்காக பேருந்துகள், ஆட்டோ, மெட்ரொ, டாக்ஸிகள் மற்றும் பிற போக்குவரத்துகளும் தடையின்றி இயங்கும்.

அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்களும் இயக்கப்படும். அவசியமற்ற பொருள்களை இரவு நேரங்களில் கொண்டு செல்வதற்கும், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தில்லியினுள் வாகனங்கள் செல்வதற்கும், மாநிலங்களுக்கு இடையே வாகனங்கள் செல்வதற்கும் தடை இல்லை. ஆனால் இ- பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.