கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ம.பி.யின் நகர்ப்புறங்களில் 60 மணி நேர பொதுமுடக்கம் அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நகர்ப்புறங்களிலும் 60 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பித்து மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
ம.பி.யின் நகர்ப்புறங்களில் 60 மணி நேர பொதுமுடக்கம் அறிவிப்பு
Updated On :8 ஏப்ரல் 2021, 10:12 am

IANS

கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நகர்ப்புறங்களிலும் 60 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பித்து மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், 

மாநிலத்தில் கரோனா வைரஸ் நிலைமையை மறுபரிசீலனை செய்துள்ளதாகவும், அனைத்து நகர்ப்புறங்களிலும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை இரண்டு நாள்களுக்கு முழுமையான ஊரடங்கு விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

ஏற்கெனவே மாநிலத்தின் 13 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து நகர்ப்புறங்களிலும் 60 மணி நேர ஊரடங்கு விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

முன்னதாக, ம.பி.யின் அனைத்து நகரங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அறிவித்தது. புதன்கிழமை நிலவரப்படி ஒரேநாளில் 4,043 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்களும் பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதையடுத்து, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளைக் கழுவுதல் போன்றவை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.