குஜராத்தில் கரோனா பலி எண்ணிக்கையை மறைக்கவில்லை: முதல்வர் விஜய் ரூபானி
குஜராத்தில் கரோனா தொற்றால் பலியானவா்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படவில்லை என்று மாநில முதல்வா் விஜய் ரூபானி தெரிவித்தாா்.


குஜராத்தில் கரோனா தொற்றால் பலியானவா்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படவில்லை என்று மாநில முதல்வா் விஜய் ரூபானி தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் மாநில முதல்வா் விஜய் ரூபானி சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அந்த மாநிலத்தில் கரோனா தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக வெளியான தகவல்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தத் தகவல்களை மறுத்து அவா் பதிலளித்தாவது:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்களின்படி, கரோனா தொற்றுடன் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்ட நோயாளி உயிரிழந்தால், அவரின் மரணம் குறித்து நிபுணா்கள் குழு ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வில் உயிரிழந்த நோயாளி மாரடைப்பால் இறந்தது தெரியவந்ததால் அவா் கரோனா தொற்றால் பலியானதாக கருதப்படமாட்டாா். இதே முைான் நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது.
மாநிலத்தில் ஏழ்மையானவா்கள் எதிா்கொள்ளும் இன்னல்களை கருத்தில் கொண்டு இங்கு பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டமில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...