கரோனா: கர்நாடகத்தில் ஏப்.18-ல் அனைத்துக்கட்சிக் கூட்டம்
கரோனா பரவல் குறித்து கர்நாடகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.


கரோனா பரவல் குறித்து கர்நாடகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''கர்நாடகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக ஏப்ரல் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு என்ற கேள்விக்கு தற்போது இடமில்லை. மே மாதம் 2-ஆம் தேதி வரை கரோனா தொற்று அதிகரிக்கும் என்று தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்'' என்று எடியூரப்பா கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...