நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சிபிஎஸ்இ தேர்வு ரத்து அறிவிப்புக்கு கேஜரிவால் வரவேற்பு

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ஆம் வகுப்புத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.

News image

சிபிஎஸ்இ தேர்வு ரத்து அறிவிப்புக்கு கேஜரிவால் வரவேற்பு

Updated On :14 ஏப்ரல் 2021, 2:42 pm IST


புது தில்லி: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ஆம் வகுப்புத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.

மத்திய கல்வித் துறையின் இந்த அறிவிப்புக்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரவேற்புத் தெரிவித்துள்ளார். மத்திய கல்வித் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பினால், மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மிகப்பெரிய நிம்மதியை அடைவார்கள் என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கேஜரிவால் மத்திய அரசுக்கு நேற்று வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவம் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 144 தடை உத்தரவும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள்  அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தில்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பிறகு, மத்திய கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், கரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

மே 4ஆம் தேதி தொடங்கவிருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தேர்வு குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.