/

எம்பிபிஎஸ் மாணவர்களை கரோனா பணியில் ஈடுபடுத்த உ.பி. அரசு முடிவு

அவசரகாலத் தேவைக்காக, உத்தரப்பிரதேச மாநிலத்தில், எம்பிபிஎஸ் நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவர்களை

News image
எம்பிபிஎஸ் மாணவர்களை கரோனா பணியில் ஈடுபடுத்த உ.பி. அரசு முடிவு
Updated On :14 ஏப்ரல் 2021, 5:42 am

PTI


லக்னௌ: அவசரகாலத் தேவைக்காக, உத்தரப்பிரதேச மாநிலத்தில், எம்பிபிஎஸ் நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவர்களை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த மாணவர்களை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற ஈடுபடுத்தப்படுவதன் மூலம், பணியிலிருக்கும் மருத்துவர்களுக்கு ஓரளவுக்கு பணிச்சுமை குறைக்கப்படும் என்று உ.பி. அரசு கருதுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.