பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எல்லாமே 2 மடங்கானது: வெறும் 10 நாள்களில் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமான பாதிப்பு

நாட்டில் முதல் முறையாக இந்த ஆண்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டியது, ஏப்ரல் 5-ஆம் தேதி, அன்றிலிருந்து சரியாக 10 நாள்களில் இன்று ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துவிட்டது.

News image
எல்லாமே 2 மடங்கானது: வெறும் 10 நாள்களில் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமான பாதிப்பு
Updated On :15 ஏப்ரல் 2021, 7:12 am

DIN


புது தில்லி: நாட்டில் முதல் முறையாக இந்த ஆண்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டியது, ஏப்ரல் 5-ஆம் தேதி, அன்றிலிருந்து சரியாக 10 நாள்களில் இன்று ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துவிட்டது.

உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதல் இதுவரை இல்லாத அளவில் நாட்டில் இன்று புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 2,00,739 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் முதல் முறையாக ஏப்ரல் 5-ஆம் தேதி ஒரு லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அன்று  நாடு முழுதும் 7,41,830 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இரண்டு லட்சம் புதிய பாதிப்புகளுடன், கரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதாவது 14 லட்சமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், பல மாநிலங்கள் ஊரடங்கு, இரவு நேர பொதுமுடக்கம், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்த ஆண்டில் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி சரியாக 36வது நாளில், இன்று ஒட்டுமொத்தமாக 14,71,877 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஏப்ரல் 5-ஆம் தேதி கரோனா தொற்றுக்கு 478 போ் பலியாகினர். ஏப்ரல் 15-ஆம் தேதியான இன்று பலி எண்ணிக்கை 1,038 ஆக அதிகரித்துள்ளது.

வெறும் 10 நாள்களில் புதிய பாதிப்பு முதல் பலி எண்ணிக்கை வரை அனைத்தும் இரண்டு மடங்காகியுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.