சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் 4 மடங்கு அதிகரிப்பு: அரசு தகவல்

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்ஸிஜன் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2021, 8:15 am

DIN

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்ஸிஜன் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நாளில் 1,273 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் ஏப்ரல் 17-ம் தேதி 4,739 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்டு வரும் ஆக்ஸிஜன் அளவில் பல்வேறு மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதனைத் தடுக்க ஆக்ஸிஜன் ஏற்றுமதிக்கு தடை விதித்து உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்களும் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க முன்வந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.