ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆக்சிஜன் பெறுவதைத் தடுக்கும் ஹரியாணா, உ.பி. அதிகாரிகள்: தில்லி துணை முதல்வர்

ஆக்சிஜன் ஏற்றி வரும் கண்டெய்னர் வாகனங்களை தடுத்தி நிறுத்தி உ.பி. மற்றும் ஹரியாணா மாநில அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதாக தில்லி துணை முதல்வர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.

News image
ஆக்சிஜன் பெறுவதைத் தடுக்கும் ஹரியாணா மற்றும் உ.பி. அதிகாரிகள்: தில்லி துணை முதல்வர்
Updated On :22 ஏப்ரல் 2021, 12:47 pm

DIN

ஆக்சிஜன் ஏற்றி வரும் கண்டெய்னர் வாகனங்களை தடுத்தி நிறுத்தி உ.பி. மற்றும் ஹரியாணா மாநில அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதாக தில்லி துணை முதல்வர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.

தில்லி மருத்துவமனைகளில் கடந்த சில தினங்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையொட்டி கரோனாவால் பாதிக்கப்பட்டவகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் தில்லி அரசு திணறி வருகிறது. 

உடனடியாக மத்திய அரசு உதவ வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரியிருந்த நிலையில் தில்லிக்கான ஆக்சிஜன் அளவை அதிகரித்து மத்திய அரசு அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க ஒடிசாவிலிருந்து கண்டெய்னர் வாகனங்கள் மூலம் ஆக்சிஜன் தில்லிக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜனைக் கொண்டு வரும் வாகனங்களை சோதனை எனும் பெயரில் தடுத்தி நிறுத்தி ஆக்சிஜன் பெறுவதைத் தாமதப்படுத்தி வருவதாக உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநில அதிகாரிகள் மீது தில்லி துணை முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தில்லி துணை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.