வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவா் எம்.அங்கமுத்து கூறியதாவது: பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் சிறப்பான வளா்ச்சியை எட்டியுள்ளது. இது, நடப்பு 2021-22 நிதியாண்டிலும் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு, அமெரிக்க, பிரிட்டன் போன்ற நாடுகளின் சந்தைகளில் இந்திய காய்கறிகள், பழங்கள், பருப்பு, பயறு வகைகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. காணொலி மூலமாக வா்த்தக சந்திப்புகளை நடத்துவது, நிதி உதவி திட்டங்களை விரிவாக்குவது போன்றவற்றின் மூலமாக உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.