47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு அமல்

திருப்பதியில் சனிக்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:07 pm

DIN

திருப்பதியில் சனிக்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால், அம்மாநில அரசு சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அதன்படி திருப்பதியிலும் சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய மருத்துவ தேவைகளை தவிா்த்து மக்கள் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரவு நேரங்களில் கடைகள், போக்குவரத்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்படும். ஆனால் மருந்தகங்கள், சோதனை கூடங்கள், ஊடகத் துறையினா், பெட்ரோல் வங்கிகள், குளிா்சாதனக் கிடங்குகள், மற்ற கிடங்குகள் உள்ளிட்டவை இயங்கும். மருத்துவத்திற்காக இரவு நேரங்களில் பயணிப்பவா்களுக்கு தடையில்லை. மேலும் இரவு ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தா்களும் இரவு 10 மணிக்குள் திருமலையை அடைந்து விடவேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.