எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அதிகரிக்கும் கரோனா: சுகாதாரப் பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள்

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பணியில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

News image
ராஜ்நாத் சிங்
Updated On :27 ஏப்ரல் 2021, 7:31 am

DIN

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பணியில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

கரோனா பணியில் ஈடுபடுவதற்காக 51 முன்னாள் ராணுவ வீரர்கள் தற்காலிக சுகாதாரத் துறை பணியாளர்களாக நியமிக்கவுள்ளனர். இந்தத் தகவலை மத்திய பாதுகாப்புத் துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய பாதுகாப்புத் துறையுன் கரோனா பரவலுக்கு எதிரான போரில் மாநில சுகாதாரத் துறைக்கு உதவி வருகிறது.

பாதுகாப்புத் துறையினருக்கான மருத்துவமனையை கரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத் துறை வாகனங்கள் மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்கு விரைவாக ஆக்ஸிஜன் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுகாதாரப் பணியில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக ஓய்வு பெற்ற 51 வீரர்களை தற்காலிக சுகாதாரத் துறை ஊழியர்களாக நியமனம் செய்யவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.