பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆம்புலன்ஸ் இல்லை; இறந்த பெண்ணின் உடலை பைக்கில் கொண்டு சென்ற அவலம்!

ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்த ஒரு பெண்ணின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம் ஆந்திரத்தில் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2021, 10:53 am

DIN

ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்த ஒரு பெண்ணின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம் ஆந்திரத்தில் நிகழ்ந்துள்ளது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு லேசான கரோனா அறிகுறிகள் இருந்துள்ளன. இதையடுத்து அவர் கரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்து சோதனை முடிவுகளுக்காக காத்திருந்தார். எனினும் முடிவுகள் வரும் முன்பே உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். 

பின்னர் மருத்துவமனை தரப்பில் ஆம்புலன்ஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக உயிரிழந்த பெண்ணின் மகன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தாயின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.