ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜார்கண்ட்டிலிருந்து புறப்பட்டது 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்'

மத்தியப் பிரதேசத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் புறப்பட்டது.

News image
Updated On :27 ஏப்ரல் 2021, 6:11 am

DIN


மத்தியப் பிரதேசத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் புறப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லாரிகளில் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேசத்திலுள்ள கரோனா மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்திற்கு ஆக்ஸிஜன் வழங்கி உதவுவதாக ஜார்கண்ட் மாநிலம் அறிவித்தது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தின் போகாரோ பகுதியிலிருந்து ரயில் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.