கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தடுப்பூசி தட்டுப்பாடு: மகாராஷ்டிர முதல்வர் ஆலோசனை

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று (ஏப்.29) பிற்பகல் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

News image
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
Updated On :29 ஏப்ரல் 2021, 6:27 am

DIN


கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று (ஏப்.29) பிற்பகல் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

இதில் சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையொட்டி மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி பெறும் பணிகளைத் தொடர்ந்து வருகிறது. 

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக கோவின் இணையத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஆரோக்கிய சேது செயலி மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்நிலையில், நேற்று மும்பையில் தடுப்பூசி இல்லாததால், கரோனா தடுப்பூசி மையம் மூடப்பட்டது. இது குறித்தும், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.