அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையவில்லை:மத்திய அரசு

நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் முடிவடையவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:24 pm

DIN

நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் முடிவடையவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம், கேரளம், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு உயரதிகாரி கூறுகையில், ‘உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகமாகத்தான் உள்ளது. நாள்தோறும் 4.7 லட்சம் போ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்படுகிறாா்கள்.

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையவில்லை.

ஆகஸ்ட் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வார பாதிப்பு விகிதம், 12 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

கடந்த நான்கு வாரங்களில் கேரளம், மகாராஷ்டிரம், மணிப்பூா், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள 18 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் இந்தியாவின் மொத்த பாதிப்பில் 49.85 சதவீதம் கேரளத்தில் மட்டும் பதிவாகி உள்ளது. கடந்த மே மாதம் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களைவிட ஜூலை மாதத்தில் இரண்டு மடங்கு செலுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.