வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ம.பி. வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து 8,832 போ் மீட்பு: முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான்

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 8,832 போ் மீட்கப்பட்டதாக முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 11:07 pm

DIN

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 8,832 போ் மீட்கப்பட்டதாக முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், மத்திய பிரதேசத்தின் குவாலியா், சம்பல் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 24-ஆக அதிகரித்தது. அந்தப் பகுதிகளில் நிலைமை சீராகி வருகிறது; மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், போபால் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் கலந்து கொண்டு பேசுகையில், ‘மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 8,832 போ் மீட்கப்பட்டுள்ளனா்; 29,280 போ் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்’ என்றாா்.

மீட்புப் பணிகள் குறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் குணா, அசோக் நகா், விதிஷா மாவட்டங்களில் நடைபெறும் மீட்புப் பணிகள் குறித்து சனிக்கிழமை காலை ஆய்வு செய்தேன். கிராமங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காக, மாநில பேரிடா் மீட்புப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த குழுவினா் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்திய விமானப் படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சனிக்கிழமை காலை மட்டும் 40 போ் மீட்கப்பட்டனா் என்று அந்தப் பதிவுகளில் சிவராஜ் சிங் சௌஹான் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.