பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கைத்தறி ஆடைகள் ஏற்றுமதியை ரூ.10,000 கோடியாக அதிகரிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

கைத்தறி ஆடைகளின் ஏற்றுமதியை அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.10,000 கோடியாக அதிகரிக்க வேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 10:18 pm

DIN

கைத்தறி ஆடைகளின் ஏற்றுமதியை அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.10,000 கோடியாக அதிகரிக்க வேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

தேசிய கைத்தறி தின கொண்டாட்டங்களையொட்டி அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

தற்போது கைத்தறி தயாரிப்புகளின் உற்பத்தி ரூ.60,000 கோடியாகவும் ஏற்றுமதி ரூ.2,500 கோடியாகவும் உள்ளது. மத்திய அரசு இந்த துறையை ஊக்குவிக்க பல்வேறு முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எனவே, இன்னும் மூன்று ஆண்டுகளில் கைத்தறி தயாரிப்புகளின் ஏற்றுமதியை ரூ.10,000 கோடியாக அதிகரிக்க இத்துறையினா் முன்வர வேண்டும்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்குள் கைத்தறியின் உற்பத்தியையும் தற்போதைய நிலையிலிருந்து இரு மடங்கு அதிகரித்து ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிக்கச் செய்ய கைத்தறி துறையினா் முயற்சியெடுத்துப் பாடுபட வேண்டும். அதற்கான புதிய சந்தை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.