நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆன்லைன் வகுப்பில் ஹெட்செட் வெடித்ததில் இளைஞர் பலி

ஆன்லைன் வகுப்பின்போது ஹெட்செட் வெடித்ததில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:43 pm IST

ஆன்லைன் வகுப்பின்போது ஹெட்செட் வெடித்ததில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளனர்.

ஆன்லைன் வகுப்பின்போது ஹெட்செட்டை பயன்படுத்தி பாடம் படித்து கொண்டிருந்த 28 வயது நபர் உயிரிழந்ததாக ராஜஸ்தான் காவல்துறையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் ராஜஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், "ஜெய்ப்பூர் மாவட்டம் சோமு நகரை சேர்ந்த ராகேஷ் குமார் நாகர், தனது வீட்டில் போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார்.

அப்போது, மின் சாதனத்தில் ஹெட்போனை பொருத்தி பயன்படுத்தியுள்ளார். திடீரென, ஹெட்போன் வெடித்ததில் அவர் சுயநினைவை இழந்தார். பின்னர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இரண்டு காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்" என்றார்.

இதுகுறித்து மருத்துவர் ருண்ட்லா கூறுகையில், "மருத்துவமனைக்கு அழைத்துவரும்போதே ராகேஷ் சுயநினைவை இழந்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்" என்றார். கடந்த பிப்ரவரி மாதம்தான் ராகேஷ் நாகருக்கு திருமணம் நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.