மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் மனு தள்ளுபடி: பியூஷ் கோயல் வரவேற்பு

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் சிசிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஆகஸ்ட் 2021, 6:51 am

DIN

சிசிஐ விசாரணைக்கு அனுமதியளிக்கப்பட்டதை எதிர்த்து அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்த நிலையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அமேசான், மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள், இந்திய தொழில் போட்டி ஆணையத்தின் விசாரணையை  எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இரு நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் வா்த்தக நடவடிக்கைகளில் இந்தியாவின் தொழில்போட்டிக்கான சட்டங்களை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவந்தது. இதன் காரணமாக, அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவ்விரண்டு நிறுவனங்களின் மீதும் மத்திய அரசு அதிருப்தியில் இருந்துவந்தது. 

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இத்தீர்ப்பை வரவேற்று பேசிய கோயல், "விசாரணையை தடுக்க இந்நிறுவனங்கள் சட்ட ரீதியான தந்திரங்களை மேற்கொண்டுவருகிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட அதே நாளில் இந்நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன். 

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மோசடியான, நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதா என்பதை விசாரிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.