மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் புதன்கிழமை தில்லியில் சந்தித்துப் பேசினார்.

News image
மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு
Updated On :11 ஆகஸ்ட் 2021, 12:42 pm

DIN

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் புதன்கிழமை தில்லியில் சந்தித்துப் பேசினார்.

தில்லி சென்றுள்ள பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது பஞ்சாப் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய கரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மருத்துவ பூங்கா அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கும் மத்திய அமைச்சர் இசைவு தெரிவித்துள்ளதாக அமரீந்தர் சிங் பேட்டியின் போது குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.