எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்தார் ராகுல் காந்தி

மூன்று நாள் பயணமாக கேரளம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று மானந்தவாடி காந்தி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்தார். 

News image
Updated On :16 ஆகஸ்ட் 2021, 10:49 am

DIN

மூன்று நாள் பயணமாக கேரளம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று மானந்தவாடி காந்தி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாடு வந்துள்ளார். 

Story image

வயநாட்டில் மானந்தவாடி காந்தி பூங்காவில் சிற்பி கே.கே. ஆர். வெங்கராவால் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையை ராகுல் காந்தி திறந்துவைத்தார். 

Story image

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாத்மா காந்தியைப் பற்றிய சக்திவாய்ந்த விஷயம் என்னவென்றால், அவர் எதைச் சொன்னாலும் செயல்படுத்திவிடுவார். இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னதுடன், அவர் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டார். பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறிய அவர், பெண்களை மரியாதையுடன் நடத்தினார்.

Story image

அப்படிப்பட்ட ஒரு இந்தியா இன்று பலதரப்பட்ட மக்களைக் கொண்டிருக்கிறது. தங்களை நியாயமற்ற முறையில் நடத்துவதாகக் கூறும் நம் மக்கள் பலர் நியாயமான ஒரு நாடு வேண்டும் என்று கேட்கிறார்கள். 

Story image

பெண்களை மதிக்கும் இந்தியா வேண்டும் என்று கூறும் அவர்களே பெண்களை மதிக்கவில்லை . மதச்சார்பற்ற நாடு வேண்டும் என்று பேசிவிட்டு ஒவ்வொரு மதத்தையும் வெவ்வேறு விதமாக பார்க்கிறார்கள் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.